Monday, February 1, 2010

Mann Manam

மண் மணம்

கல்லும் மண்ணும்
மறுபிறவி யெடுத்து
சுயவடிவம் பெற்றதுபோல்
ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது.

எங்கள் வீடுகளெல்லாம்
வீதிக்கு வந்து
மாதங்கள் பலவாகிவிட்டன
வீதியாய்மாறிவிட்ட பல
வீடுகளும் உண்டு.

தரை கரையெல்லாம் வெறிச்சோடிக்
கவனிப் பாரற்றுக் கிடக்கிறது
அலைகள் மட்டும்
மீண்டும் மீண்டும்
சீண்டிப் பார்க்கிறது
கரையை நக்கி நக்கி.

ஆயிரம் ஆயிரம் உயிர்களை
அப்படியே ஏப்பமிட்டும்
அமைதியாய் அடங்கிக் கிடப்பது
அந்த ஆழி மட்டும்தான்.

மெல்ல மெல்ல அடியெடுத்து
மணற்பரப்பை நோக்கி நகர்கிறேன்.
வாசனை - மண்ணின் வாசனை
வாரி நெஞ்சில் தடவிக்கொள்கிறேன்

இன்னும் மாறவில்லை
இந்த மண்ணின் வாசனை மட்டும்.

No comments: