Monday, February 1, 2010

Kaathal Thiruddu

காதல் திருட்டு

அவளைத் தொலைத்துவிட்டு
அகிலமெலாம் தேடுகிறேன்.

ஆசையாய்த் துடைத்து
அன்பு முத்தமிட்டு
அழகாய் வைத்திருந்தேன்
அரைக்கைச் சட்டைக்குள்.

அலுவலக உபயோகத்திற்காய்
அவ்வப்போது பதிவுசெய்த
ஆயிரம் இலக்கங்கள் - அவளை
ஆக்கிரமிப்புச் செய்தன.

நிஜக் காதலியின்
நித்திரைச் செய்தியெல்லாம்
அவளுள்தான் அமைதியாய்
அடங்கிக் கிடந்தன.

மகாபொலவில் புது
மணத் தம்பதிகள்
கைகோர்த்துச் சென்றதையும்
கிளிக்செய்து வைத்திருந்தேன்.

செல்லிடம் என்பதால்
சென்றுவிட்டாயோ என்னிடம்
சொல்லிக் கொள்ளாமல்
செருக்குடன் நீ!

தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்
தொலைபேசிக் காதலியை
தெரிந்தவர்கள் தயவுடன்
திருப்பித் தந்திடுங்கள்.

காதலைத் திருடுவது - உங்களுக்குக்
களங்கமெனத் தெரியாதா?

No comments: