Monday, February 1, 2010

Thanimai

தனிமை

பூக்களின் மலர்ச்சி
உன் சிரிப்பையும்
தென்றலின் தொடுகை
உன் ஸ்பரிசத்தையும்
மழையின் வருகை
உன் குளிர்ச்சியையும்
வெய்யிலின் தாக்கம்
உன் கோபத்தையும்

புயற்காற்றின் வேகம்
உன் ஆர்ப்பாட்டத்தையும்
அடிக்கடி ஞாபகப்படுத்துகிறதே!
அப்போதெல்லாம் உன்னை
கோபித்துக்கொள்வேன் பின்
உன் கையாலாகாத்
தன்மையை எண்ணியும்
சற்று ஆறுதலடைவேன்.

நான் ஒன்றும்
தனிமைப்படுத்தப் பட்டவனல்ல
நீ என்னைத்
தனிமைப் படுத்தினாலும்!
என்னுயிர் இவ்வுலகில்
இருக்கும் வரை
இயற்கையும் எனக்குத்
துணையாய் இருக்கும்.

இருட்டுக்குள் நான் இருந்தாலும்
இன்றும் என்னிதயம் உன்
வெளிச்சத்தைத் தான் தேடுகிறது
வெளிச்சத்துள் இருக்கும் நீயோ
இருட்டடிப்புக் காரியாய் இன்னமும்
என் வெளிச்சத்தைப் போக்குகிறாயே!

1 comment:

வைகறை நிலா said...

தமிழில் உள்ள அழகான வார்த்தைகள் எல்லாம் உங்கள் கவிதைகளில்..

இனிய கவிதை...