Monday, February 1, 2010

Manak Kilesam

மனக் கிலேசம்.

நித்திரையில் நான்
நாலுமுறை எழுந்திருப்பேன்.

பல்துலக்கிக் குளித்திட
பலமணி நேரம்
தலை துவட்ட
தலை முழுகிப் போகும்.

காலையுணவு ருசிக்காது
காலை வாரிவிடும்.
இஸ்திரிகை செய்யாஆடை
இன்றுமட்டும் என்றுசொல்லும்.

சைக்கிள் சாவியைத்தேடி
சலிப்புத் தட்டிவிடும்.
கடிகாரத்தைப் பார்த்தால்
கதிகலங்கிவிடும்.

வேகமாகச்சென்று பின்னர்
விழிபிதுங்கி நிற்பேன்.
எரிபொருள் தீர்ந்தது
என்மூளைக் கெட்டாது.

எப்படியோ சமாளித்து
எட்டிப்பிடிப்பேன் கந்தோரை.
வரவுப்பதிவேடு மட்டும்
வரிசையாயுள்ள புத்தகங்கள்மேல்
வலியச்சென் றமர்ந்ததுபோல்
வாவென்று கையசைக்கும்.

சிவப்புக்கோடு எச்சரிக்கும்
இன்றும்நீ லேட் தானென்று.

முந்தநாள் சம்பவங்கள்
முழுவதையும் ஏப்பமிட்டதுபோல்
முகாமையாளர் வீற்றிருப்பார்
முகாரி என்மனதில்தான்.

1 comment:

முல்லை அமுதன் said...

vaazhuthkkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/