Saturday, January 30, 2010

Saddaippaikkul Sankili

சட்டைப்பைக்குள் சங்கிலி.

பக்கத்து மாணவனின்
பென்சிலைத் திருடி
மூன்றாக்கிச் சட்டைப்பைக்குள்
மறைத்து விட்டேன்.

சட்டைக்குள் என்னவென
சடுதியாய் விசாரணை
சங்கிலி என்றேன்
கிலிபிடித்து நின்றநான்.

அன்று அதிபராயிருந்த
என் அப்பாவின்
ஐந்து விரல்களும்
என் கன்னத்தில்.

இன்று சங்கிலியைக் காணும்போதெல்லாம்
என் சட்டைப்பைக்குள் பென்சிலையும்
கன்னத்தில் வடுவினையும் - ஏதோ
எண்ணத்திற் தேடுகிறேன்.

No comments: