Saturday, January 30, 2010

Vendaam Uththam

வேண்டாம் யுத்தம்...

வேகத்தைக் குறைத்து
வீதித்தடை தாண்டி
வலதுபக்கம் திரும்பிப்பார்க்கிறேன்
வெறிச்சோடிக் கிடக்கிறது ஷசெக்பொயின்ட்|.

செக்குமாடுகள் போல்
சுற்றிச் சுற்றிவந்த
ஒருவரையும் காணவில்லை - அந்த
ஒரு கருப்பு நாயையும்தான்.

நான் தினமும் வேலைக்குச்செல்லும்
நன்கு பரிச்சயமான பாதைதான்.

பலமுறை வானை நிறுத்திவிட்டு
பல்லிழித்து அடையாளம் காட்டிரூபவ்
அனுமதி கிடைத்ததும்
அடிதடுமாறி தப்பிப்பிழைத்தோ மென
மீண்டும் வாகனத்தில் ஏறி
மறைந்ததும் இங்குதான்.

தாய் தந்தை தாரம்
தம்பி தங்கை அண்ணா
மாமன் மாமி மச்சான்
மதினி மக்கள் உறவுகளெல்லாம்ரூபவ்

நலிந்து நடைப்பிணமாகி
நாறிவிட்ட நிலையில்
நடை பயின்று
நல்லபல பண்புகளுடன்
மீண் டெழுவதைக்
காணும் போதுரூபவ்

வேண்டாம் வேண்டாம்
மீண்டுமொரு யுத்தம்
எம் ரூடவ்ழத்திருநாட்டில்
இனி மேலும்!

No comments: