மூங்கில் நினைவு.
முட்கம்பி தாண்டி
மூங்கில் மரம்தறித்து
முழுசாய் முடிவதற்குள்
முதுகில் மூங்கிலடி.
வாரிச் சுருட்டி
வேலி பாய்ந்து
வீடு வந்தபோது
விழுந்த அடிகள்
மூங்கில் தாகினை
முழுமை பெறச்செய்தன.
முந்தநாள் மூத்தமகன்
மூங்கில் வேண்டுமென்று
முகத்தைப் பார்த்தபோது
முதுகைத் தடவிக்கொண்டேன்.
முப்பது வருடங்களாக
முதுகைத்தான் தடவுகிறேன்
மூங்கில் நினைவுமட்டும்
முதுகைவிட்டு நீங்கவில்லை.
No comments:
Post a Comment